முச்சக்கர வண்டிக்குள் போதைப்பொருள்; 40 லட்சம் பெறுமதி
தொடங்கொட பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த ஒரு முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோது, அதிலிருந்த நபரிடமிருந்து சுமார் 225 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
இதன் சந்தை மதிப்பு சுமார் 40 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைக்கு முற்றுப்புள்ளி தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாகனச் சோதனை நடவடிக்கையின் போது, தொடங்கொட மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரைத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார். கைது செய்யப்பட்ட நபர் களுத்துறை பகுதியில் இயங்கும் ஒரு பிரதான போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறார்.
சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரைத் தடுப்புக்காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.