யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்!

Jaffna Sri Lanka Police Investigation Death Penalty Fire Crime
By Sulokshi Apr 22, 2023 01:04 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான இளம் தாய் விஜிதா உயிரிழந்திருந்தார். இந்த நிலையில், தமது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகளைபறிகொடுத்த பெற்றோர் கண்ணீருடன் கூறியுள்ளனர்.

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

நீதிகோரி கதறும் பெற்றோர்

உயிரிழந்த விஜிதா யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர். அவருக்கு திருமணமாகி 10 வயதான பெண் பிள்ளை ஒன்றும் உள்ள நிலையில் தமது பிள்ளையுடன் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.

அதேவேளை சுகிர்தன் நீண்டகாலத்தின் முன்னரே திருமணமானவர் என்பதுடன் அவரது மனைவி வெளிநாட்டில் இரு பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில், சுகிர்தனின் மற்றுமொரு மகன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

இந்நிலையில் உயிரிழந்த விஜிதாவின் வீட்டிலேயே தவிசாளர் உணவருந்துவதாகவும் அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அவர் அழைத்து செல்வதாகவும்  உயிரிழந்த விஜிதாவின் பெற்றோர் கூறுகிறார்கள்.

கடந்த 16ஆம் திகதி தனது தோழி ஒருவர் பெட்ரோல் இன்றி வீதியில் இடைநடுவில் நிற்பதாகவும், அவருக்கு பெட்ரோலை வழங்கி விட்டு வருவதாகவும் கூறியே வீட்டை விட்டு விஜிதா வெளியேறியுள்ளார் .

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

நீடிக்கும் மர்மம்

எனினும் இரவு 1 மணிவரை வீடு திரும்பாத விஜித்தாவிற்கு பலமுறை தொலைபேசி அழைப்பை எடுத்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் இரவு 1.30 மணியளவில் சுகிர்தனின் மகனும் மற்றுமொரு நபரும்  தமது வீட்டிற்கு வந்து இவ்வாறு மகள் தீ மூட்டிகொண்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனைகேட்டு பதறியடித்த பெற்றோர்கள் அதிகாலை முச்சக்கரவண்டியில் மகளைபார்க்க வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மகள் 10 மணிக்கு வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் சென்றாள். எனவே 3 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மகள் 10.30க்கு அங்கு சென்றிருப்பாள். அதற்கு பிறகு அவள் தீமுட்டி கொண்டுள்ளாள்.

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

ஆனால்  சுகிர்தன் தங்களுக்கு எதனையும் கூறவில்லை என  கண்ணீர்விடும் விஜிதாவின்  தாயார்   , தமது தொலைபேசி இலங்கங்கள் அவரிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில்  தனது மகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், விஜிதாவின்  மரணதொடர்பில்   உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் எனவும்   பெற்றோர் கண்ணீர் விடுகின்றனர்.

அதேவேளை விஜிதா தற்கொலை செய்தாரா அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா என்பது உறுதியாகாத நிலையில் தவிசாளர்  பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு  விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

அன்று வித்தியா... இன்று விஜிதா... நாளை யாரோ?

இந்நிலையில் விஜிதாவின் இறப்பை தற்கொலை எனக் கருதிவிட்டு யாழ்ப்பாணச் சமூகம் கடந்து போகின்றதா? எனும் சந்தேகம் வலுவடைந்துள்ளது.

இந்திய அரசியலை விட கேவலமான அரசியல் எமது தேசத்தில் இப்போது  உள்ளது.  அரசியல்வாதிகள் எதையும் செய்து விடலாம்  யாரும் தம்மை கேள்வி கேட்க முடியாது என்ற நிலையில் எமது தேசம்    உள்ளது.

இதுவே சாதாரண நபர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தால் நிச்சயமாக பொது அமைப்புகள் அரசியல்வாதிகள் பாய்ந்துவந்து  குரல் கொடுத்திருப்பார்கள். 

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

வலிகாமம்  என்பது யாழ்ப்பாண மாவட்டத்தின் மிகப் பெரும் மக்கள் தொகை உள்ள ஒரு பகுதி ஆகும் . அதில் சமூக பொறுப்போடு சிந்திக்கும் மக்கள் ஏராளமானோர் இருந்தும்   விஜிதா மரணத்தில் ஏன் மௌனம்  காக்கின்றார்கள் என்பது கேள்விக்குறி.

 அன்று வித்தியாவுக்காக  குரல் கொடுத்தவர்கள்  , இன்று விஜிதா  தொடர்பில்  மௌனின்ற நிலமை வேதனையை ஏற்படுத்துகின்றது.

 இதேபோல்  நாளை  இன்னொரு சம்பவம் நடந்தேறாது என்பது என்ன நிச்சயம்? விஜிதாவின் மரணத்தில் மறைக்கப் பட்ட இரகசியம் என்ன?     

தாயை இழந்து தவிக்கும் குழந்தைக்கும் , கதறி அழும் பெற்றோருக்கும் பதில் கூறாது,   எல்லாவற்றுக்கும் காலத்தை  காரணம் கூறி சமூக பொறுப்புள்ள எவரும்  இதனை கடந்து செல்ல முடியாது.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US