யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்!

Jaffna Sri Lanka Police Investigation Death Penalty Fire Crime
By Sulokshi Apr 22, 2023 01:04 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான இளம் தாய் விஜிதா உயிரிழந்திருந்தார். இந்த நிலையில், தமது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகளைபறிகொடுத்த பெற்றோர் கண்ணீருடன் கூறியுள்ளனர்.

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

நீதிகோரி கதறும் பெற்றோர்

உயிரிழந்த விஜிதா யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர். அவருக்கு திருமணமாகி 10 வயதான பெண் பிள்ளை ஒன்றும் உள்ள நிலையில் தமது பிள்ளையுடன் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.

அதேவேளை சுகிர்தன் நீண்டகாலத்தின் முன்னரே திருமணமானவர் என்பதுடன் அவரது மனைவி வெளிநாட்டில் இரு பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில், சுகிர்தனின் மற்றுமொரு மகன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

இந்நிலையில் உயிரிழந்த விஜிதாவின் வீட்டிலேயே தவிசாளர் உணவருந்துவதாகவும் அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அவர் அழைத்து செல்வதாகவும்  உயிரிழந்த விஜிதாவின் பெற்றோர் கூறுகிறார்கள்.

கடந்த 16ஆம் திகதி தனது தோழி ஒருவர் பெட்ரோல் இன்றி வீதியில் இடைநடுவில் நிற்பதாகவும், அவருக்கு பெட்ரோலை வழங்கி விட்டு வருவதாகவும் கூறியே வீட்டை விட்டு விஜிதா வெளியேறியுள்ளார் .

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

நீடிக்கும் மர்மம்

எனினும் இரவு 1 மணிவரை வீடு திரும்பாத விஜித்தாவிற்கு பலமுறை தொலைபேசி அழைப்பை எடுத்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் இரவு 1.30 மணியளவில் சுகிர்தனின் மகனும் மற்றுமொரு நபரும்  தமது வீட்டிற்கு வந்து இவ்வாறு மகள் தீ மூட்டிகொண்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனைகேட்டு பதறியடித்த பெற்றோர்கள் அதிகாலை முச்சக்கரவண்டியில் மகளைபார்க்க வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மகள் 10 மணிக்கு வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் சென்றாள். எனவே 3 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மகள் 10.30க்கு அங்கு சென்றிருப்பாள். அதற்கு பிறகு அவள் தீமுட்டி கொண்டுள்ளாள்.

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

ஆனால்  சுகிர்தன் தங்களுக்கு எதனையும் கூறவில்லை என  கண்ணீர்விடும் விஜிதாவின்  தாயார்   , தமது தொலைபேசி இலங்கங்கள் அவரிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில்  தனது மகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், விஜிதாவின்  மரணதொடர்பில்   உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் எனவும்   பெற்றோர் கண்ணீர் விடுகின்றனர்.

அதேவேளை விஜிதா தற்கொலை செய்தாரா அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா என்பது உறுதியாகாத நிலையில் தவிசாளர்  பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு  விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

அன்று வித்தியா... இன்று விஜிதா... நாளை யாரோ?

இந்நிலையில் விஜிதாவின் இறப்பை தற்கொலை எனக் கருதிவிட்டு யாழ்ப்பாணச் சமூகம் கடந்து போகின்றதா? எனும் சந்தேகம் வலுவடைந்துள்ளது.

இந்திய அரசியலை விட கேவலமான அரசியல் எமது தேசத்தில் இப்போது  உள்ளது.  அரசியல்வாதிகள் எதையும் செய்து விடலாம்  யாரும் தம்மை கேள்வி கேட்க முடியாது என்ற நிலையில் எமது தேசம்    உள்ளது.

இதுவே சாதாரண நபர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தால் நிச்சயமாக பொது அமைப்புகள் அரசியல்வாதிகள் பாய்ந்துவந்து  குரல் கொடுத்திருப்பார்கள். 

யாழ் விஜிதா மரணத்தில் அவிழுமா மர்மங்கள்? பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சிதகவல்! | Doubts Have Arisen In Vijita Suside Case

வலிகாமம்  என்பது யாழ்ப்பாண மாவட்டத்தின் மிகப் பெரும் மக்கள் தொகை உள்ள ஒரு பகுதி ஆகும் . அதில் சமூக பொறுப்போடு சிந்திக்கும் மக்கள் ஏராளமானோர் இருந்தும்   விஜிதா மரணத்தில் ஏன் மௌனம்  காக்கின்றார்கள் என்பது கேள்விக்குறி.

 அன்று வித்தியாவுக்காக  குரல் கொடுத்தவர்கள்  , இன்று விஜிதா  தொடர்பில்  மௌனின்ற நிலமை வேதனையை ஏற்படுத்துகின்றது.

 இதேபோல்  நாளை  இன்னொரு சம்பவம் நடந்தேறாது என்பது என்ன நிச்சயம்? விஜிதாவின் மரணத்தில் மறைக்கப் பட்ட இரகசியம் என்ன?     

தாயை இழந்து தவிக்கும் குழந்தைக்கும் , கதறி அழும் பெற்றோருக்கும் பதில் கூறாது,   எல்லாவற்றுக்கும் காலத்தை  காரணம் கூறி சமூக பொறுப்புள்ள எவரும்  இதனை கடந்து செல்ல முடியாது.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US