தனுஷ்க விவகாரத்தை அரசியலாக்காதீர்கள்!
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதில்க மீதான் சம்பவத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்க வேண்டாம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கும் கீர்திக்கும் மேலும் சேதம் ஏற்படும் என முன்னாள் அமைச்சரான நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
டுவிட்டர் பதிவு
தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தாம் , விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு விளையாட்டு நிர்வாகத்தில் தலையிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.