இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவரா நீங்கள்? எச்சரிக்கை தகவல்!
கேன்சர் என்பது ஒரு சிக்கலான நோய். இதில் பல வகைகள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. எனினும் கேன்சரின் வளர்ச்சிக்கு பல காரணிகள் பங்களிக்கும் என்பது நிபுணர்களின் விளக்கமாக இருக்கிறது.
கேன்சரை பொறுத்தவரை மரபணு காரணிகள் முக்கிய பங்கு வகித்தாலும் வாழ்க்கை முறை பழக்கம், உணவுமுறை பழக்கம் உள்ளிட்ட வெளி காரணிகளும் அதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக எப்போதுமே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் போது இயற்கையாகவே உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம். அதுவே பேக்கரி பொருட்கள், வறுத்த உணவுகள், தேவையற்ற ஸ்னாக்ஸ்கள் என்பவற்றை சாப்பிட்டால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை.
உலகளவில் மரணத்திற்கு கேன்சர் மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் தொடர்பான நோய்கள் உருவாக்க வழி வகுக்கும்.
கேன்சர் செல்கள் உடலில் வளர்வதற்கு ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களும் முக்கிய காரணமாக அமைகின்றன. நம்முடைய வழக்கமான உணவு பழக்கம் கேன்சர் அபாயத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும் என்பதற்கான ஆய்வு ஆதாரங்கள் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன.
எனவே கேன்சர் உள்ளிட்ட ப அபாய நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
அவையாவன,
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
இறைச்சி, கோழி, மீன் மற்றும் முட்டை உள்ளிட்டவற்றை ஆரோக்கியத்திற்காக சாப்பிடுவது எவ்வளவு முக்கியமானதோ, அதை விட முக்கியம் அவற்றை சரியான முறையில் சாப்பிடுவது. எடை அதிகரிப்பு முதல் கேன்சர் வரை பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்த கூடியது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது ஒருவருக்கு பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
வறுத்த உணவுகள்:
கேன்சர் செல்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மற்றொரு ஆபத்தான உணவு பழக்கம் அதிகமாக வறுத்த உணவுகளை சாப்பிடுவது. உருளைக்கிழங்கு அல்லது இறைச்சி போன்ற உணவுகளை அதிக சூட்டில் வறுத்து சமைக்கும் போது அதில் acrylamide என்ற கலவை உருவாகிறது. இந்த கலவை கேன்சர் பண்புகளை கொண்டது மற்றும் டிஎன்ஏ-வை சேதப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரீஃபைண்ட் பொருட்கள்:
ரீஃபைண்ட் அதாவது சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை, எண்ணெய் என எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் கேன்சர் செல்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் பொருட்களை எடுத்து கொள்வது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சி அபாயத்தை அதிகரித்து பல வகையான கேன்சர்கள் ஏற்பட வழிவகுக்கும்.
பால் பொருட்கள்:
அதிகமாக பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடுவது புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. பால், சீஸ், தயிர் போன்றவற்றை மிதமிஞ்சி சாப்பிடுவது புரோஸ்டேட் கேன்சர் உயிரணுக்களின் பெருக்கம் அல்லது உற்பத்தியை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பேக்டு உணவு பொருட்கள்:
இன்ஸ்டென்ட்டாக சமைத்து சாப்பிட கூடிய நூடுல்ஸ், பாஸ்தா, உப்புமா, இட்லி உள்ளிட்ட பேக்டு உணவு பொருட்கள் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். பெரும்பாலான ரெடி டு குக் உணவு பேக்குகளில் இருக்கும் Bisphenol A ரசாயனம் உணவில் கரையும் போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, டிஎன்ஏ மாற்றம் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.