துளசி செடியை வீட்டில் எந்த நாளில் நட்டால் நல்லது தெரியுமா?
இந்து மரபில் துளசி வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. துளசி செடி விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமானதாகவும், ஸ்ரீ செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறது.
துளசி செடியை வீட்டில் வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடத்திலும் துளசிக்கு முக்கியத்துவம் உண்டு. துளசியை நன்றாகப் பராமரித்தால், வறுமை நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
அவ்வாறு இருக்கையில் துளசி செடியை நட எந்த நாள் சிறந்தது என நாம் இங்கு பார்ப்போம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடியை வியாழக்கிழமை வீட்டில் நடுவது மிகவும் நல்லது. இந்த நாள் விஷ்ணு பகவானின் நாளாக கருதப்படுகிறது, எனவே துளசி செடியை வியாழக்கிழமை நட்டால் விஷ்ணுவின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் துளசி செடியை நட்டோ அல்லது தொடவோ கூடாது. மேலும், ஞாயிற்றுக்கிழமை அல்லது ஏகாதசி நாளன்று துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதைச் செய்யாவிட்டால், தீமைகள் நேரிடும்.
கார்த்திகை மாதத்தில் துளசி செடியை வீட்டில் நடுவது சிறந்தது. இந்த மாதம் துளசி அன்னையை வழிபடும் மாதமாய் கருதப்படுகிறது.