வெயில் நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா? இதையும் தெரிஞ்சுக்கோங்க!
கோடைகாலம் வந்து விட்டாலே வெயில் சுட்டெரிக்கும். கோடைகாலத்தில் சரியான உணவு முறையை கடைப்பிடிப்பது முக்கியம். அது தெரியாமல் நம் விருப்பத்திற்கு சாப்பிட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அதாவது, பல வகைகளிலும் உடல் நலம் பாதிக்கும். அந்த வகையில் கடுமையான வெயில் நேரங்களில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்:

எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?
புளிப்பு, காரம் அதிகம் சேர்க்கப்படும் உணவுகள்: புளிப்பு காரம் அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு காரக்குழம்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. உடல் சூட்டையும் பித்தத்தையும் அதிகரிக்கும் என்பதால் வெயில் காலத்தில் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும். காரமான உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் சூட்டால் நீர் கடுப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
தேநீர்: வெயில் நேரத்தில் தேநீர் குடிப்பது பித்தத்தை அதிகப்படுத்தும். அதனால் முடிந்த அளவு வெயில் காலங்களில் இவற்றை தவிர்ப்பது நல்லது. வெயிலில் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும்.
மசாலா சேர்த்த உணவுகள் : அதிக காரமான பச்சை மிளகாய், மிளகு மசாலா சேர்த்த உணவுகள் வயிற்றுப் போக்கை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் ஆசனவாயில் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
மைதா உணவுகள்: கடைகளில் விற்கும் பரோட்டா போன்ற மைதா உணவுகள் மற்றும் ஃபாஸ்ட்புட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.