எனக்கு முதியவருக்கான விருதா? பிரித்தானிய மகாராணி காட்டம்!
இந்த ஆண்டின் சிறந்த முதியவருக்கான விருதை பெறுவதற்கு 95 வயதான பிரித்தானிய ராணியாரான 2ஆம் எலிசபெத் ( Elizabeth) மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல பத்திரிகை ஒன்று பொது வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் முதியவர்களை கெளரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ‘ஓல்டி ஆப் தி இயர்’ என்கிற விருதை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த முதியவர் விருதை 95 வயதான இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்துக்கு ( Elizabeth)வழங்க அந்த பத்திரிகை நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் ராணி 2ஆம் எலிசபெத் ( Elizabeth0அந்த விருதை பெற மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக அவர் குறித்தபத்திரிகைக்கு எழுதிய கடிதத்தில்,
‘‘முதுமை என்பது நீங்கள் உணர்வதில்தான் உள்ளது. அதாவது முதுமை என்பது மனதில்தான் உடலில் அல்ல. நான் என்னை முதுமையாக உணரவில்லை. எனவே நான் இந்த விருதுக்கு தகுதியானவர் அல்ல. தகுதியான நபரை கண்டுபிடித்து அந்த விருதை வழங்குவீர்கள் என நம்புகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மறைந்த பிரித்தானிய இளவரசரும், ராணி எலிசபெத்தின் ( Elizabeth) கணவருமான பிலிப் கடந்த 2011ஆம் ஆண்டு தனது 90 வயதில் ஆண்டின் சிறந்த முதியவர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.