நடிகர் கமல்ஹாசனை ஏமாற்றிய திமுக; வெறுப்பில் அறிக்கை வெளியிட்ட உலக நாயகன்!
இந்தியாவில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ப்ரல் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக மற்று விஜய் இன் தவெக ஆகிய கட்சிகள் இடையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தமிழகத்தின் அடுத்து ஆட்சியில் அமரப்போவது யார் என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது அவர் திமுக கூட்டணியில் இருந்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம்; வேலையில்லாது சொத்து கொள்வனவு ....விசாரணை வளையத்துள் உறவினர்கள்!
வெறுப்பில் அறிக்கை
கமலின் கட்சிக்கு திமுக மிக மிக சொற்பமான எண்ணிக்கையில் தான் தொகுதிகள் வழங்க முன்வந்ததாக கூறப்படும் நிலையில் அது பற்றி கமல் காட்டமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
"நமக்கு தருவதாக சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்புடையதாக இல்லை." "ஆகவே 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடவில்லை, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பது என்கிற முடிவை அறிவிக்கிறோம் என உலகநாயகன் கமல்ஹாசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.