பாடசாலை மாணவர்கள் தகராறு கத்திக்குத்தில் முடிந்தது
இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பாட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்கான மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவன் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
16 வயதுடைய பாடசாலை மாணவனே காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகராறுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனத் தெரிவிக்கும் பொலிஸாார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.