மனிதர்களை தாக்கக்கூடிய புதிய கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு! அதிர்ச்சி தகவல்
தாய்லாந்து நாட்டில் வௌவால்கள் மத்தியில் மனிதர்களை தாக்கக்கூடிய புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டு விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உரமிடுவதற்காக வௌவால்களின் மலத்தை சேகரிக்கும் குகையில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க்கில் உள்ள அரசு சாரா சுகாதார அமைப்பின் தலைவர் மருத்துவர் பீட்டர் தசாக் வெளியிட்ட கருத்து,
உலக சுகாதார அமைப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் சீனா - வுஹானில் கொரோனா வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்த நிபுணர்கள் குழுவால் இது தொடர்பான வைரஸைக் கண்டுபிடித்ததாகக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய வைரஸ் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.