பிரான்ஸ் மருத்துவமனை ஒன்றில் நபரொருவரின் விபரீத முடிவு! அதிர்ச்சி சம்பவம்
பிரான்ஸில் வைத்தியசாலை வாசல் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை அதிகாலை 30 வயதான நபர் ஒருவர் Pyrénées-Orientales-வில் உள்ள Perpignan வைத்தியசாலை வாசலில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபர் ஒரு வீடற்றவர் என்பதும், மொரோக்கா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவ தினத்தன்று மற்றொரு வீடற்ற நபர் இவரின் சடலத்தை பார்த்த பின்னரே, அவர் கொடுத்த தகவலின் பேரிலே சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.