முல்லைத்தீவில் பரபரப்பு: சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளி!
முல்லைத்தீவு மாவட்டம் - மாங்குளம் பகுதியில் இன்றிரவு ஆண் மாற்றுத்திறனாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் இன்றைய தினம் (13-04-2023) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாற்றுத்திறனாளி முச்சக்கர வண்டியில் பயணித்துகொண்டிருந்த போது வாந்தி எடுத்ததாகவும், சாரதியும் வர்த்தகர் ஒருவரும் அவரை இறக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் அவரை 1990 இலக்க நோயாளர் காவு வண்டியில் ஏற்ற அழைத்த போது அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது.
குறித்த நபர் மட்டக்களப்பு களவாஞ்சிக்குடி பகுதியை சேர்ந்த 51 வயதுடைய பெருமாள்சாமி சந்திரகுமார் எனும் ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.