திலிப் வெதாராச்சி எம்.பியின் மகன் மற்றும் மருமகள் அதிரடி கைது
போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராய்ச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீரக்கெட்டிய காவல்துறையினரால் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் பாதுகாப்பற்ற முறையில் கெப்ரக வாகனத்தின் பிற்பகுதியில் குளிர்சாதனபெட்டியை ஏற்றி தெற்கு அதிவேக வீதியில் பயணிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
இதனை அவதானித்த போக்குவரத்து காவல்துறையினர் அவர்களை தடுத்துள்ள நிலையில், காவல்துறையின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்தநிலையில் அவர்கள் தங்களது சட்டத்தரணிகள் ஊடாக காவல்துறையினரிடம் முன்னிலையானமை அடுத்து கைதாகினர்.
இதன்போது அவர்களை வலஸ்முல்ல நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.