திறப்பை கேட்ட டக்ளசின் சகா திலீபனால் வெடித்தது புதிய சர்ச்சை
பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலையின் அனைத்து திறப்புகளையும் வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்க, நாடாளுமன்ற உறுப்பினர் க. திலீபனுக்கு எந்த அதிகாரமும் இல்லையென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் நேசராஜா தெரிவித்தார்.
புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை திறப்புகளை வலயக் கல்வித் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு திலீபன் எம்.பி தெரித்துள்ளார்.
இந்த நிலையில், அது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் நேசராஜா கூறுகையில்,
அதிபர் – ஆசிரியர்கள் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொழிற்சங்கப் போராட்டம். , அதிபர்களிடம் திறப்புகளை ஒப்படைக்குமாறு எவரும் கேட்க முடியாது. அவ்வாறான ஒரு தேவை இருப்பின், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஊடாக அறிவுறுத்தல் கிடைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும் , வெறுமனே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கட்டளையிட முடியாது என்றும், அவருக்கு திறப்பை ஒப்படைக்க கூற எந்த அதிகாரமும் இல்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் கூறியுள்ளார்.