அரச உத்தியோகத்தர்களுக்கு பிரதி அமைச்சர் உபாலி விடுத்த முக்கிய அறிவிப்பு!

Shankar
Report this article
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு அரச ஊழியர்கள் கடினமாக பயணியாற்ற வேண்டும் என்று பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
வெள்ள நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (28-11-2024) இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளப் பாதிப்பு விடயத்தில் வவுனியா மாவட்ட செயலகம் விரைவான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
அந்தவகையில் இனமத பேதம் என்ற விடயம் இங்கு இல்லை. அனைவரும் எங்களுடையமக்கள். அரசியல் பேதமின்றி இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக உழைக்கவேண்டும்.
அரச ஊழியர்கள் என்ற வகையில் நீங்கள் இவ் விடயத்தில் சற்று கடினமாக பணியாற்றவேண்டும்.
இதிலிருந்து விடுபடுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து நிதி உட்பட வேறு எவ்வாறான விடயங்கள் தேவையெனில் அதில் தலையிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.