இலங்கையில் அதிகரிக்கும் மற்றொரு கொடிய நோயின் எண்ணிக்கை!
இலங்கையில் இந்த ஆண்டில் (2021) டெங்கு மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், கடந்த இரு மாதங்களாக இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (31-12-2021) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது 15 மாவட்டங்களில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகக்கூடும்.
புத்தாண்டு (2022) பிறக்கின்ற நிலையில், வழமை போன்று அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்த நிலையில், குறித்த நிறுவனங்களில் டெங்கு ஒழிப்புக்கான திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
நகர் மற்றும் கிராமப் பகுதிகளிலும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.