60 நாட்களின் பின் விநியோகம் ; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
இரு மாதங்களுக்கு மேலாக லாப்கேஸ் எரிவாயு வழங்கப்படாத நிலையில் நுவரெலியா மின்சார சபை கட்டிடத்திற்கு முன்பாக இன்று விநியோகம் இடம்பெற்றது.
லாப்கேஸ் எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நுவரெலியா மக்களுக்கு இன்று வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகாலை 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.
லாப்கேஸ் எரிவாயு விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 1150 சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நுவரெலியா, பொரலாந்த , கந்தபளை ,மாகஸ்தோட்டம் , நானுஒயா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொது மக்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டது.
அதேசம்யம் இதன் போது நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட்டமையால், சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.