மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமானப்படை அதிகாரிகள் ஐவர் கைது
மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று, அந்த இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த 5 விமானப்படை அதிகாரிகள் மற்றும் இரண்டு சிவில் பிரஜைகளையும் மத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த விமானப்படை அதிகாரிகளால் விமான நிலைய நிலப்பரப்பினுள் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை, வளாகத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற வேளையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது சந்தேகநபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கைதைத் தொடர்ந்து, வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டி ஒன்றும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.