தமிழ்க் கைதிக்கு கொலைமிரட்டல்; அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் பிரவேசித்து தமிழ்க் கைதி ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அநுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி அநுராதபுரம் பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, அங்கிருந்த தமிழக் கைதி ஒருவக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதே, பிரதான நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.