கொழும்பில் இரு மாணவர்கள் மரணடைந்ததற்கான காரணம் வெளியானது!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பில் பிரபலமான கல்லூரிகளை சேர்ந்த 2 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்படி, இசிப்பத்தன கல்லுரியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரும், கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவி ஒருவருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார தரப்பினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு இசிப்பத்தன கல்லுரியைச் சேர்ந்த சமித்த டில்துஷான், களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஆகஸ்ட் 14 ஆம் திகதி மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமித்த டில்துஷான், மேலதிக சிகிச்சைகளுக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றின் வீரியத்தன்மையினை கருத்தில் கொண்டு பொது மக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறு சுகாதார பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் நாட்டில் டெல்டா தாக்கம் அதிகமாகியிருப்பதாகவும், இது பெரும் ஆபத்தாக மாறும் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.