விபத்துக்குள்ளான இந்திய விமானம்; மூவர் பலி
இந்திய விமானப்படை விமானமொன்று, வீடொன்றின் மீது வீழ்ந்ததால் பொதுமக்கள் மூவர் பலியானதுடன் சிலர் காயமடந்துள்ளன.
இச்சம்பவம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமான்கார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரஷ்ய தயாரிப்பான மிக் -21 ரக விமானமொன்றே இவ்வாறு வீழ்ந்துள்ளது.
உயிர்தப்பிய விமானி
விமானம் வீழ்ந்ததை இந்திய விமானப்படைஉறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை விமானத்தின் விமானி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உயிர்தப்பியுள்ளார்.
சூரத்கார் நகரிலுள்ள விமானப்பபடைத் தளத்திலிருந்து பயிற்சி நடவடிக்கைக்காக சென்றிருந்த விமானமொன்றே இன்று காலை 9,45 மணியளவில் வீழ்ந்தள்ளது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விமானி சூரத்கார் தளத்திலிருந்து வடகிழக்கே 25 கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
விபத்துக்குள்ளான விமானம் ஹனுமான்கார் மாவட்டத்தின் பஹ்லோ நகரிலுள்ள வீடொன்றின் மீது வீழ்ந்ததால், துரதிஷ்டவசமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.