பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட விரிசல்...பிரிந்ததா நட்புக் கூட்டணி?
பிக் பாஸ் சீசன் 5 தற்போது மிகவும் சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கிறது.
நேற்றைய தினத்தில் கமல் ஹசன் அவர்கள் பிரியங்கா மற்றும் அபிஷேக் ஆகியோரது நடவடிக்கைகள் மீது பல கேள்விகளை எழுப்பினார். அதன் தாக்கமோ என்னவோ தெரியவில்லை பிரியங்கா தற்போது மிகவும் கோபமாகவே காணப்படுகிறார்.
அதனை வெளிக்காட்டுவது போல இன்றைய தினத்திற்கான ப்ரோமோ வெளியானது. அதில் பிரியங்கா நிரூப்பிடம் மிகவும் கோபமாக பேசுவது போல இருந்தது.
இது மூலம் பிக் பாஸ் வீட்டில் தொடக்கம் முதலே இருந்த நட்புக் கூட்டணியான பிரியங்கா,நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோரிடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.