முன்னாள் மட்டு மாநகரசபை மேருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் மட்டு.மாநகர சபை முதல்வர் மாநகரசபை முன்னாள் முதலவர் சிவகீர்த்தா பிரபாகரனுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறு தீர்பளித்துள்ளது.
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்னால் அமைந்துள்ள சிவகீர்த்தாவின் வீட்டிற்கு அருகில் நடத்திவந்த விபச்சார விடுதியை கடந்த 2016-10-24 ம் திகதி பொலிஸார் முற்றுகையிட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் உட்பட விடுதியை நடாத்திய சிவகீர்த்தாவை கைது செய்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவருக்கு எதிராக மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் ஆஜராகாத நிலையில் 3 மாத காலத்தின் பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னாள் மாநகர சபை மேயரை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.