குழந்தையை பெற்று ஜன்னலில் வீசிய மாணவிக்கும் காதலனுக்கும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி மலசலகூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 23 திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் வயிற்று வலி என தெரிவித்து அதிகாலை 3.30 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
பின்னர் மாணவி அதிகாலை 5.00 மணிக்கு மலசலகூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து யன்னல் வழியாக வீசிய நிலையில் குழந்தை ஜன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் வீசிய குழந்தையை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியையும், மாணவியை கர்ப்பமாக்கிய 24 வயதுடைய காதலனையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.