மட்டக்களப்பில் உயிரிழந்த இளைஞனின் சடலம் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு!
அண்மையில் மட்டக்களப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை தோண்டி எடுத்து , மீள உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருதயபுரத்தை சேர்ந்த 21 வயதான சந்திரன் விதுஷன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
எனினும், பொலிஸார் அவர் 4 ஐஸ் போதைப்பொருள் பக்கட்டுகளை விழுங்கியதால், அது உடலுக்குள் வெடித்து உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக அறிவித்தனர்.
ஆனால் பொலிசார் தாக்கியதாலேயே விதுஷன் உயிரிழந்ததாக பெற்றோர் குறிப்பிட்டனர்.
தமது கண் முன்னே அண்ணா தாக்கப்பட்டதாக அவரது தங்கை குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.