உயர் அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டணை
தம்புத்தேகம மகாவலி பகுதியில் உள்ள நிலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிகளை வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சம் கோரியதற்காக முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (25) 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடூழிய சிறைத்தண்டனை
மேலும், பிரதிவாதிக்கு 30,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 26 இன் கீழ் இலஞ்சத் தொகையை அபராதமாக வசூலிக்கவும் அபராதம் செலுத்தப்படாவிட்டால், மேலதிகமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சட்டத்தரணிக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க பிரதிவாதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2016ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதியன்று பிரதிவாதி தொடர்புடைய இலஞ்சத்தைப் பெற்றபோது, இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மேலும், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 67 வயதுடைய முன்னாள் காணி அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.