திங்களின் பின்னர் நாடு திறக்கப்படும்; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாட்டை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதோடு முடக்கலின் போது கொரோனா தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். நோய் பரவுவதை கட்டுப்படுத்த நான்கு வார முடக்கல் போதுமானது என்றும், அடுத்த திங்கட்கிழமைக்குப் பின்னர் நாடு முடக்கப்படும் என தான் நினைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு படிப்படியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும், கொவிட் உடன் ஒரு புதிய வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் அதே நேரத்தில் சுகாதார நடைமுறைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தடுப்பூசிகள் கருவுறாமை மற்றும் பாலியல் செயலிழப்பை ஏற்படுத்தும் என்ற வதந்திகளையும் அமைச்சர் இதன் போது நிராகரித்தார்.