ஸஹிராக் கல்லூரியின் நடைபவனி
மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு ‘ஸஹிரா நடைபவனி’ இடம் பெற்றுள்ளது.
இது கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் கோலாகலமான முறையில் மாவனல்லை நகரை வலம் வந்துள்ளது.
பழைய மாணவர்களின் உயரிய ஒத்துழைப்புடன் நடந்தேறிய இந்நடைபவனி பல காத்திரமான படைப்புகளுடன் மாவனல்லை நகரை வலம் வந்து ஸஹிராத்தாயின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது எனலாம்.
நாலா பக்கங்களிலும் வந்து கல்வி கற்ற கல்லூரித்தாயின் மாணவர்கள் ஒன்று சேர கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் அதிநீளமான பாடசாலைக் கொடி என்ற பெருமையைச் சுமந்த ஸஹிராத்தாயின் 244 மீற்றர் நீளமான பாடசாலைக் கொடி கல்லூரியின் 83rd batch (2016 A/L) இனால் தயாரிக்கப்பட்டு 150 ஸஹிரா மாணவர்கள் சுமந்து சென்று வரலாற்றுச் சாதனை படைத்தமை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும்.