வவுனியாவில் கொரோனா சடலங்கள் தகனம்; மக்கள் அசௌகரியம்!
வவுனியாவில் கொரோனா சடலங்களை தகனம் செய்யும்போது வெளியேறும் புகையால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மயானத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உடல்களை தகனம் செய்யும்போது வெளிச்செல்லும் புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த மயனாத்தில் எரிவாயு மூலம் சடலங்களை தகனம் செய்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சடலங்களை தகனம் செய்யும்போது அதன் புகை வெளியேறுவதற்காக பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கும் கோபுரம் உயரம் குறைவாக காணப்படுவதால் அதனூடாக வெளிச்செல்லும் புகை அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குச் செல்வதாக கூறப்பௌகின்றது.
அத்துடன், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசும் நிலையும் காணப்படுகின்றதாகவும் அந்த வீதியினை பயன்படுத்துபவர்களுக்கும் இதனால் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே குறித்த எரியூட்டும் புகைபோக்கும் கோபுரத்தினை தற்போது இருக்கும் உயரத்தினைவிட மேலும் அதிகரிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
