மாய வித்தைக்காட்டி வில்லங்கமான ஆசிர்வாதம் போலி இளம் சாமியார் ; காணொளியால் வெடித்த சர்ச்சை
கர்நாடக மாநிலம் யாத்கீர் மாவட்டம் ஷாஹாபூரைச் சேர்ந்த இளைஞர், தன்னை சாமியார் எனக் கூறிக்கொண்டு ஊருக்குள் காவி சகிதமாக உலாவியுள்ளார். ஊர் ஊராகச் சென்று ஆசி வழங்குவதாக சில புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை நம்ப வைத்துள்ளார்.
அதில் ஒரு சில கணிப்புகள் மெய்யானதால் மக்களும் குறித்த இளைஞனை கொண்டாடியுள்ளனர். இதையடுத்து ஷாஹாபூரில் உள்ள கோயிலில் ஆசிரமம் அமைத்து, நானே கடவுள் என்ற ரீதியில் பூஜைகள் செய்து தனக்கென ஒரு பக்தர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

மாய வித்தை
செல்லும் இடமெல்லாம் சில மாய வித்தைகளைக் காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் சிலர் அப்பாஜி என அழைத்து, அவரது போட்டோவை தங்களது வீடுகளில் வைத்து வணங்கியுள்ளனர்.
சாமியார் பக்தர்களை கட்டிப்பிடித்து, அரவணைத்து ஆசி வழங்குவதை தனது முறையாக கொண்டுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த முறையிலேயே கையாண்டுள்ளார்.
இந்த நிலையில் 7 வயது சிறுமியை, அவரது பெற்றோர் முன்னிலையில் மடியில் வைத்து ஆசி வழங்கியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் விவாதப் பொருளானது.
சிறுமியின் பெற்றோரே வீடியோவை இணையத்தில் பதிவிட்டனர். இருந்தபோதும், சாமியாரின் மடியில் இருந்த சிறுமி தர்ம சங்கடத்துடன், இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதையடுத்து தன்னைத் தானே சாமியார் என்று கூறிக்கொண்டு திரியும் குறித்த இளைஞன் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த போலி சாமியாரை பின்தொடரும் பக்தர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.