கொழும்பில் இடம்பெறவுள்ள பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சி!
இலங்கை தலைநகரில் பிரித்தானியாவின் பிரபல பொப் பாடகர் எட் சீரனின் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இரண்டு தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2025ம் ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிகழ்ச்சிகள் இலங்கையானது, சுற்றுலாவுக்கான கேந்திர நிலையமாக மாற்றமடைவதற்கு உதவும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.