வடமாகாண ஆளுநர் தொடர்பில் பிரதமரிடம் முறைப்பாடு
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்பை எடுப்பதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் சில பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் பேசுவதற்காக பல தடவைகள் வடமாகாண ஆளுநரை தொலைபேசியில் முயற்சித்தபோது , அவர் எனது அழைப்புக்களுக்குப் பதிலளிக்கவில்லை.
அதேவேளை வடமாகாணத்தின் ஆளுநர்களாக இருந்த திருமதி சார்ள்ஸ் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் நாம் எந்தவேளையில் தொலைபேசி அழைப்பு எடுத்தாலும் உடனடியாகப் பதில் வழங்குவார்கள்.
ஆனால், தற்போதுள்ள ஆளுநர் ஜீவன் தியாகராஜா எமது தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதிலளிப்பதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் முறையிட்டுள்ளார்.