இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு ஆதரவு ; விஜய் விரைவில் அரியணை ஏறுவார் என எதிர்பார்ப்பு !
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி கடிதம் கடிதம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து தவெகவுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு 114 ஆக அதிகரித்துள்ளது.
தவெக ஆட்சி அமைக்க இன்னும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையே உள்ளது. அதேசமயம் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விஜய்க்கு தமது ஆதரவை சிறிது நேரத்தில் அறிவிக்க உள்ளதாகவும் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.

ஆட்சியமைக்க இன்னும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
இதற்கான ஆதரவு கடிதத்தை தவெக எம்எல்ஏ சிடிஆர்.நிர்மல்குமாரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வழங்கினார்.
அதேவேளை தவெக ஆட்சியமைக்க இன்னும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மார்க்சிஸ்ட் மற்றும் விசிக கட்சிகள் இன்று மாலை தங்களின் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.
இந்நிலையில் , விரைவில் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்கபார்க்கப்படுகின்றது.