லண்டனில் குடி போதையில் தமிழர் ஒருவர் செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல்
லண்டனில் குடி போதையில் பொலிசாரை எட்டி உதைத்து எச்சில் துப்பி மிக மோசமாக நடந்து கொண்ட தமிழர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி கிங்ஸ்பரியில் நடந்துள்ளது. அங்குள்ள பிரின்ஸெஸ் அவென்யூவில் தெய்வேந்திரம் பாலகுமார் (58) என்பவர் குடி போதையில் படுத்திருந்ததாக தெரிகிறது.
அப்போது அவரை பொலிசார் எழுப்பினார்கள், இதையடுத்து கோபமான பாலகுமார் ஒரு காவலரை கால்களால் எட்டி உதைத்ததோடு இன்னொரு காவலர் முகத்தின் மீது எச்சல் துப்பியுள்ளார். இதை தொடர்ந்து பொலிசார் பாலகுமாரை கைது செய்தனர்.
அதன்பின்னர் விசாரணையில் பாலகுமாருக்கு நிலையான முகவரி இல்லை என தெரியவந்தது. அவர் மீதான வழக்கு வெல்லிஸ்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி பாலகுமாருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.