யாழ் - கொழும்பு புகையிரத சேவைகள் ஆரம்பம்; திகதி இதோ!
யாழ் - கொழும்பு இடையிலான புகைரத சேவைகள் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.புகைரத நிலைய அதிபர் கூறியுள்ளார். கொரோனா அபாயம் காரணமாக நாடுபூராகவும் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கல்கிசை - காங்கேசன்துறைக் கிடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 3ஆம் திகதி மாலை ஆரம்பமாகவுள்ளது. அதன்படி 3ம் திகதி மாலை 5.30 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும் புகையிரதம் காங்கேசன்துறையை வந்தடைந்து மறுநாள் 4 ஆம் திகதி காலை 5.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு கொழும்புக்கு பயணிக்கவுள்ளது.
எனினும் இன்று வரை முற்பதிவு தொடர்பான எந்தவித தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகும் புகையிரத சேவையானது வழமைபோல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு ஒரு சேவையும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு சேவையுமாக
சாதாரண புகையிரத சேவை மாத்திரமே முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.