கொழும்பு பல்கலை மாணவி கொலை; சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கொழும்பு குதிரைப் பந்தய திடலில் வைத்து கொழும்பு பல்கலைக்கழக மாணவியை கொலை செய்த சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (ஜன 30) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவி ஆண் நண்பரான பல்கலைகழக மாணவனால் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video