கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில்: தேங்கியிருந்த 26 சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம்!
கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் 2017 தொடக்கம் தேங்கியிருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் நேற்று புதன்கிழமை (11) இரவு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்படள்ளதாக ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்தார்.
இந்த உடல்கள் நல்லடக்கம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை (12) பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் தேங்கிகிடந்த 40 சடலங்களை மட்டக்களக்கு ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனாவினால் உயிரிழந்த ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கத்தினால் அடையளப்படுத்தப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யுமாறு கொழும்பு மாளிகாவத்தை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து நேற்று இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஓட்டமாவடிக்கு 26 சடலங்கள் கொண்டுவரப்பட்டதையடுத்து அதனை இரு கிடங்குகளில் பரப்பப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கொரோனாவினால் உயிரிழந்த 1537 பேரின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அதிகளவபன சடலங்கள் வருவதனால் அதனை புதைப்பற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த இடப்பற்றாக்குறை தொடர்பாக கடந்த சில தினங்களாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் இந்த பகுதியில் எதிர்வரும் சிலநாட்களின் பின்னர் சடலங்கள் அடக்கம் செய்ய முடியாத றிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.