வெடித்துச் சிதறிய சீனக் கப்பல் ; சிக்கிய ட்ரம்பின் இரசகிய பயணம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், ஈரான் துபாய் மற்றும் கட்டார் மீது தாக்குதல் நடத்தியதாக சர்வதேச அளவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவங்களுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அண்மைய அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம் என சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வரலாற்றில் முதன்முறையாக ஈரான் துபாய் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, கட்டார் மீதும் அதிகளவில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இருந்து, சில தகவல்களின் படி ஈரானை விட அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும் கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்த உத்தியோகப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் இதுவரை வெளியாகவில்லை. துபாய் உலகளாவிய வர்த்தக மற்றும் முதலீட்டு மையமாகக் கருதப்படுவதால், பல நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் அங்கு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் தனது கரன்சி வர்த்தகத்தில் ஈட்டிய சுமார் 85,000 அமெரிக்க டொலரை துபாயில் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இதுகுறித்தும் அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வெளியாகவில்லை.