விடுதியில் தனியாக தவித்து வந்த குழந்தை: பத்திரமாக மீட்ட இளம்பெண்! அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் சில நாட்களாக பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று எறும்பு மொய்த்த நிலையில் தனியார் விடுதிக்குள் இருந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சென்னையில் உள்ள பூந்தமல்லி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இரண்டு நாட்களாக அந்த குழந்தை அழுது கொண்டு இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதை பார்த்த பெண்ணொருவர் குழந்தையினை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சென்னை பூந்தமல்லி கூடத்தில் உள்ள இராமானுஜர் தெருவில் ஒரு தனியார் பெண்கள் விடுதி செயல் பட்டு வருகிறது.
இந்த விடுதியில் வெளிச்சம் வருவதற்காக ஒரு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்திலிருந்து பூனை ஒன்று அழும் குரல் ஒன்று கேட்டுள்ளதாகவும், பூனைதான் கத்துகிறது என்று அங்கிருந்தவர்கள் அலட்சியமாக விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த 2 நாட்களாக இந்த சத்தம் கேட்டதால் அங்கு இருந்த யுவராணி என்ற பெண் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு குழந்தை இருந்ததாகவும், குலைந்து மேல் எறும்பு மொய்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து அந்த பெண் விரைந்து சென்று குழந்தையை மீட்டு உடனடியாக பூந்தமல்லி அரச மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அதனை தொடர்ந்து குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிரிவி காட்சிகளை வைத்து குழந்தையை யார் அங்கே விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.