முப்பது வருட கால யுத்தம் குறித்து காலம் கடந்து வருந்தும் சந்திரிக்கா!
நாட்டையோ மனித இனத்தையோ யுத்தத்தின் மூலம் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அது வெற்றியல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டையோ மனித இனத்தையோ யுத்தத்தின் மூலம் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது- அது வெற்றியல்ல. முப்பது வருடகால இனப்படுகொலையுத்தத்தில் நாங்கள் பெருமளவு விடயங்களை இழந்துள்ளோம்.
தென்பகுதி, வடபகுதி தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர். நாங்கள் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் என பிளவுபட்டோம். அதன் விளைவால் நான் ஒரு கண்ணை இழந்தேன்.
யுத்தத்தினால் - மேலும் பல இழப்புகளை எதிர்கொண்டேன். இந்நிலையில் யுத்தமுடிவை கொண்டாடும் இந்த தருணத்தில் குரோதத்திற்கு பதில் அன்பை வெளிப்படுத்துவோம். பழிவாங்குவதற்கு பதில் மன்னிப்போம்.
பிரிந்திருப்பதை விட இணைந்திருப்பதில் மகிழ்ச்சியாகயிருப்போம்.
இன்றைய நாளை , உறுதிப்பாடு மற்றும் சமாதானத்திற்கான நாளாக மாற்றுவோம்.
உலகிற்கு அன்பை காண்பிப்போம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.