எங்களுக்கு பயமில்லை... ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்த சவால்!
சேவையை விட்டு விலகியதாக கருதப்படும் அறிவிப்பின் பிரகாரம் தமது சேவையின்றி ரயில் சேவையை முன்னெடுக்க முடியுமாயின் அதனை செய்து காட்டுமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சவால் விடுத்துள்ளது.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
“எங்களுக்கு பயமில்லை, வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார். இந்த அடக்குமுறைக்கு எதிராக நாளை மேலும் பல தொழிற்சங்கங்கள் திரளும்.
ரயில் நிலைய அதிபர் ஒருவர் கூட இந்த கடிதங்களுக்கு பயப்படப்போவதில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை. பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் தொடர்பில் அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே விடுத்த அறிவித்தலுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.