இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு கடும் வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச் மாதத்தில் 16.1 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் இது தெரியவந்துள்ளது. 2022 பிப்ரவரியில் 2,311 மில்லியன் டாலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு மார்ச் இறுதியில் 1,939 மில்லியன் டொலராக குறைந்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் மாதத்தில் 2,026 மில்லியன் டொலரில் இருந்து 14.09 சதவீதம் சரிந்து 1,724 மில்லியன் டொலராக உள்ளது. இதற்கிடையில், மார்ச் மாதத்தில் 98 மில்லியன் டொலராக இருந்த தங்க கையிருப்பு 28 மில்லியன் டொலராக குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது 70 சதவீதம் குறைவு என மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.