கிறிஸ்மஸ் பண்டிகை ஆடம்பரமாக வேண்டாம் ; பேராயர் கோரிக்கை
நாட்டில் சீரற்ற வானிலையால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்புற்ற நிலையில், இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையை ஆடம்பரமாக கொண்டாடவதை கத்தோலிக்கர்கள் தவிர்க்க வேண்டுமெனபேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் தமது குடியிருப்புகளை இழந்துள்ளதுடன், தமது அன்புக்குரியவர்களையும் இழந்துள்ளனர்.

ஆடம்பரம் , தேவையற்ற வீண் செலவு வேண்டாம்
இவ்வாறான சூழலில் ஆடம்பரம் அல்லது தேவையற்ற வீண் செலவுகளுடன் கூடிய கொண்டாட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு கத்தோலிக்க சமூகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்மஸ் பண்டிகை உண்மையில் எளிமையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகும். கடவுளின் மகனான இயேசு கிறிஸ்து ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார்.
அவரது பிறப்பு மிகவும் எளிமையானது. இதனால் அவரின் பிறப்பை வரவேற்கத் தயாராகும் கிறிஸ்தவர்களும் எளிமையுடன் அதனை கொண்டாடுவது சிறந்தது என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தெரிவித்துள்ளார்.