பேலியகொட துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான பரபரப்பு சிசிரிவி புகைப்படம்!
பெத்தியாகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் நடத்தும் சிசிரிவி காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (26) பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெத்தியாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் விற்பனை நிலைய உரிமையாளரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாகவும் எவருக்கும் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.