தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் - பிரதமர் மோடி சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று (27) காலை தனி விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார்.
டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்று பொலிஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் விஜய் இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மாநில நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளார்.

தேர்தலில் பெற்ற வெற்றிக்காக விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்திற்கான நிதி, நீட் விவகாரம், மீனவர் பிரச்சனை, மேகதாது அணை குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.