கசூரினா உல்லாசக் கடற்கரைக்குச் சென்ற மாணவன் காணவில்லை!
காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இச்சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இளைஞன் காணாமல் போயுள்ளார். இந் நிலையில் குறித்த மாணவனை தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களினால் தேடப்பட்டுகிறார்.
இச்சம்பவத்தில் கோண்டாவிலைச் சேர்ந்த லோகீஸ்வரன்17 வயதான மாணவனே அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
கோண்டாவில் இருந்து 20 பேர் காரைநகர் கசூரினா உல்லாசக் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் ஒருவர் மீண்டு வந்த நிலையில் மற்றையவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.