காலி முகத்திடலில் கெசினோ சூதாட்ட நிலையம் ; விஜித ஹேரத் தெரிவிப்பு
கோட்டா கோ கம அரகலய நிகழ்வுகள் இடம்பெற்ற காலி முகத்திடலில் கெசினோ நிலையமொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரகலய தளத்தில் சூதாட்ட நிலையத்தை திறப்பதற்கு சீன பெயரைக் கொண்ட நிறுவனமொன்றுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஊடாக உரிமம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், நீர்கொழும்பில் உள்ள பிரபல சூதாட்டக்காரர் ஒருவர் இந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பின்னணியில் இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த ‘அரகலய தளம்’ அரகலய மக்களை பழிவாங்குவதற்காக கெசினோ நிலையமொன்றுக்காக வழங்கப்படுவதாகவும் அது பாரிய தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்டணம்
உள்ளூர் மக்களை இலக்கு வைத்து கெசினோ நிலையங்கள் திறக்கப்படமாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கெசினோவைத் திறக்கும்போது 10 பில்லியன் செலுத்த வேண்டும்.
“சூதாட்ட விடுதியைத் திறப்பது எளிதல்ல. கெசினோவைத் திறக்கும் போது ஆரம்பகட்டமாக ரூ.10 பில்லியன் செலுத்த வேண்டும்.

உள்ளூர்வாசி ஒருவர் சூதாட்ட விடுதிக்குள் நுழையும் போது, நுழைவுக் கட்டணமாக 50 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும், மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கட்டணம் 200 அமெரிக்க டொலராக இருக்கும்.
உள்ளூர்வாசிகள் சூதாட்ட விடுதிகளை ஆதரிப்பதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்.
இந்த சூதாட்ட விடுதிகள் வெளிநாட்டினரை மட்டுமே குறிவைக்கின்றன,” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.