தேங்காய் சேர்த்த உணவுகள்..... சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பான உணவுகளை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. ஏனெனில் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கூறினால் அதனால் ஏற்படும் விளைவுகளும் பாரதூரமாக மாறிவிடும் என்பதனால் தான்.
அதோடு சர்கரை நோயாளிகள் சில உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும் ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு.
தேங்காயில் உள்ள லாரிக் அமிலம்
இதன் காரணமாக சில உணவுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா வேண்டாமா என்பது குறித்த சந்தேகம் அவர்களுக்கு இருக்கும்.
அந்தவகையில் தேங்காய் சேர்த்த உணவுகள் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என பார்க்கலாம்.
தேங்காயில் பி1, சி, மாங்கனிஸ், பொட்டாசியம், காப்பர், இரும்பு ,பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன.
அதுமட்டுமல்லாது இதில் லாரிக் அமிலம் உள்ளிட்ட கொழுப்பு அமிலங்களும் உள்ளன, தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் உடலில் உள்ள தொற்றுக்களை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கும் திறன் கொண்டது.
இரத்த சோகையை விரட்டும் தேங்காய் பால்
எலும்புகளை பலப்படுத்தி, சரும நோய்களை தீர்த்து, இரத்த சோகையை விரட்டும் தேங்காய் பால். உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும்.
ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.
சர்க்கரை நோயாளிகள் உணவுகளில் தேங்காய் கலந்து சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் அதே நேரத்தில் தேங்காய் பால் வடிவில் சாப்பிடுவது தான் பிரச்சனையை ஏற்படுத்தும்.
எனவே சர்க்கரை நோயாளிகள் தேங்காய் பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தேங்காயை துருவி காய்கறி போன்ற பொரியலில் போட்டு அதை சாப்பிடலாமாம்.