நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் ; பலர் படுகாயம்
ஹல்துமுல்ல, கிரவணகம, கோனகட்டிய பகுதியில் இன்று (23) மாலை 6.00 மணியளவில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் படுகாயமடைந்து தியதலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் தனியார் பேருந்து ஓட்டுநரும் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிரவணகமவிலிருந்து பண்டாரவளைக்குச் சென்ற பண்டாரவளை டிப்போவைச் சேர்ந்த பேருந்தும், ஹப்புத்தளையிலிருந்து கிரவணகமவுக்குச் சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் இரண்டு பேருந்துகளும் பயணிகளால் நிரம்பியிருந்தன, மேலும் விபத்தில் இரண்டு பேருந்துகளும் சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்