யாழ்ப்பாணம் சென்ற அநுர மீது கடும் கோபத்தில் பௌத்த துறவி
பொங்கல் தினத்தையொட்டி நேற்று (15) யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விசேட பூஜைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதன் போது பல கலை கலாசார நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டு மக்களுடன் தைப்பொங்கலை கொண்டாடியிருந்தமை குறிப்பிடதக்கது.

ஜனாதிபதியின் யாழ் விஜயம்
ஜனாதிபதியின் யாழ் விஜயம் தொடர்பில் நயினாதீவு விகாராதிபதி வெளியிட்ட கருத்துக்கள் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
பொதுவாகவே ஜனாதிபதி ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டால் நயினாதீவு விகாராதிபதியை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம் ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவ்வாறு தன்னை சந்திக்க வரவில்லை நயினாதீவு விகாராதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் கடந்த கால அரசாங்கத்துடன் மிக நெருக்கத்துடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல முக்கிய விடயங்களை விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி....